Friday, 23 December 2011

பெண்களை காமத்திற்காக மட்டும் பார்ப்பதை நிறுத்தவே....!

இந்த பகுதியை 18+ மட்டும் படிக்கவும்.

இந்த பகுதியில்  பெண்களின் உண்மையை சொல்லவே இதை பற்றி எழுதுகிறேன். இதை பற்றி எழுதும் முன் அதிகம் யோசித்த பின்னரே  எழுதுகிறேன்...
 என் தளத்தை படிப்பவர்களில் பெண்களும் இருக்கலாம், இருகின்றனர் . அப்படி இருந்தும் நான் ஏன் இந்த மாதிரி பதிவுகளை எழுத வேண்டும் என்று கேக்கும் தோழர்கள் உண்டு. 


நான் காமத்தை கொண்டாடவோ ! பெண்கள்  மீது  உள்ள  இச்சையையை  தனித்து கொள்ளவோ இதை நான் எழுதவில்லை . தமிழ் ஆங்கிலம் போல காமமும் ஒரு பாடம் தான்.

பெண்களை காமத்திற்காக மட்டும் பார்ப்பதை நிறுத்தவே....!
 
பெண்  ......

ஒரு பெண் தன்னை ஒருவனுக்கு எளிதாக கொடுத்து விட மாட்டாள்.... அதை பற்றிய ஆய்வு ஒன்றின் உண்மைகள்....

வெறும் உடல் கவர்ச்சி ,,, சுகம் இதற்காக செக்ஸ் வைத்து கொள்ளும் பெண்கள் மிகவும் குறைவு...!

84% பெண்களுக்கு பணிசுமை , மன அழுத்தம் இவற்றில் இருந்து விடு பட செக்ஸ் உதவுகிறது....

ஆண்கள் மீதான இரக்க குணம் கூட பெண்கள் செக்ஸ் வைத்து கொள்ள காரணம்... என்கிறது ஆய்வு .
தனக்காக சிரம படும் ஆணுக்காக பெண் குடுக்கும் முதல் பரிசு அவள்தான்.

இதற்காகவே ஆண்கள் சிரமபடுவதும் உண்டு ..... 

செக்ஸ் போர் அடிப்பதாக கருதுகிறனர்  பெண்கள் .... அவர்களுக்கு தேவை செக்ஸ்க்கு பிறகான அன்பு மட்டுமே.... தன் வேலை முடிந்ததும் தள்ளி படுக்கும் ஆண்களை பெண்கள் விரும்புவது இல்லை. 

ஒற்றை தலை வலியை குறைக்க செக்ஸ் பயன் படுகிறது.....

நாம் பிறந்தது பெண்ணின் பிறப்புறுப்பில் தான், பால் குடித்தது பெண் மார்பில் தான். 
இதை  புரிந்தால்  பெண்கள் மதிக்கப்படுவார்கள்... 

(கருத்துக்கள் இடவும் ....தளம் பிடித்து இருந்தால் உங்கள் தோழருக்கு அறிமுக படுத்தவும்.)

Wednesday, 14 December 2011

யாருடா போன் பண்ணறது ...?

நீங்கள் போன் வச்சு  இருக்கீங்களா   ?


இது  என்ன டா  கேள்வி  ? லூசு  தனமா   இருக்குனு  நெனைக்கறிங்களா  ?


அடிகடி உங்க நம்பர்க்கு தெரியாத நம்பர்ல இருந்து    கால்ஸ் வருதா?

கவலைய  விடுங்க! அந்த நம்பெர   கண்டுபுடிக்கலாம் ....

இதோட பயன்: (ஆண்களுக்கு )

* உங்கள காவலன் படத்துல வர அசின் மாதிரி யாரும் ஏமாத்த  முடியாது .

*நண்பர்கள் யாரும் பொண்ணுக பேரை வச்சு ஏமாத்த முடியாது.

*உங்க தங்கச்சிக்கு வர தப்பான போன் கால்ஸ் கண்டுபுடிக்கலாம்.

*உங்க பெண் தோழி யாரு கூட பேசறாங்கன்னு தெரிஞ்சுக்கலாம்.

(பெண்களுக்கு):


*உங்களுக்கு வர தப்பான கால்ஸ் யாருதுன்னு , உங்க லவர் கிட்ட    சொல்லி  தர்ம   அடி   வாங்கி  குடுக்கலாம்  .


*உங்களுக்கு எந்த  பையன்  நூலு   விடரான்னு   தெரிஞ்சுக்கலாம்.


* தப்பான நபர்களிடம்  இருந்து உஸ்ஸார   இருக்கலாம்   .


இந்த அம்சங்கள் பிடித்து இருந்தால் ...இங்கே கிளிக் செய்யவும்



(கருத்துக்கள் இடவும்)



Tuesday, 13 December 2011

வேலாயுதம்

விஜய் பிடிக்குமா?

பிடிக்காதவர்களுக்கு ! கூட பிடிக்கும். இந்த படம். வேலாயுதம் ......


இந்த படம் தெலுங்கு டபிங் என்ற போதிலும்.. ரசிக்க வைக்கிறது. சிறிது நாளுக்கு பிறகு வந்த  சேவாக்    அடி  பின்னி  எடுக்கலையா ! அது போல இந்த படத்தில் பின்னி  எடுக்கிறார் விஜய்.

படம் ஆரம்பித்த  15 நிமிடங்கள் மனம் நொந்து போவது உண்மைதான் .  
விஜய்- ம்  சந்தானமும் பார்க்க  வைக்கிறார்கள்.. கல கலப்புக்கு பஞ்சம் இல்லை  .  .

என்னதான் தமிழ் படமாக இருந்த போதிலும் .... அந்த தெலுங்கு பட வாசனை வீசுகிறது. சில இடங்களில் மட்டும் அல்ல, பல  இடங்களில் லாஜிக் தவறுகிறது..


விஜய், ரொம்ப நாளுக்கு பிறகு காவலன், வேலாயுதம் போன்ற கலகலப்பான  படம் குடுத்து  இருக்கிறார் .

ஹன்சிகா  கிராமத்து  பெண்    என்று  கூறுகிறார்கள் ,,, அப்படி ஒன்றும் தெரிய வில்லை ..... பஜன் லால் சேட்டு... காமெடி  நினைவில்  நிற்கிறது ....  
வழக்கம்  போல  இளவரசு வரும் சில இடங்களில் பலே   ..... ஜெனிலியா அப்படி ஒன்னும் பெருசா  இல்லை..


பாடல்:

மாயம் செய்தாயோ ? பாடல் வேகமாக சென்றாலும் ,,,, கேக்க வைக்கிறது. chilax  பாடல் ... விஜய் ஆண்டனி   சார்  இன்னும்  பிட்  அடிக்கிற  பழக்கம்  போகலையா ? 


கேள்வி:

யார் என்றே தெரியாமல் "வேலாயுதம் துணை" என்று மக்கள் எழுதி கொள்வது ஏன்?


பதில்:

ஏன்னா?  அவர்தான்டா ஹீரோ.....................   


முக்கிய  குறிப்பு :

படம் பார்க்கலாம் ......  



படத்தில் பிடித்தது:

விஜய் சந்தானம்  காமெடி ..... விஜய் நடனம் ......



படம் பார்க்கும்  போது :

"வேலாயுதம் சாகல " இதை  விஜய் சொல்லும்  பொது .... தியேட்டர்'ல செம்ம  சவுண்ட் ....... இந்த மாதிரி ரசிகர்கள் இருக்கும் போது!!!!!!!!!!!!
 படம் கண்டிப்பா 1000௦ நாள் தான்....    

மதிப்பெண்கள் : 50  க்கும் மேல் 

படத்தின் பற்றி மேலும் தெரிந்து கொள்ள.....இங்கே கிளிக் செய்யவும் .....

(கருத்துக்கள் தெருவிக்கவும் )

Thursday, 8 December 2011

தெரு கூத்து 2


சேவாக் 219 



இந்த செய்தியை கொண்டாடுபவராக நீங்கள் இருந்தால் இந்த பகுதியை வாசிக்க வேண்டாம்.

இதை எழுதும் நான் சச்சின் ரசிகன். இதை படிக்கும் நீங்கள் கூட அவரின் தீவிர  ரசிகராக இருக்கலாம். அந்த அளவுக்கு எனக்கும் கிரிக்கெட் விளையாட தெரியாது. ஏதோ விளையாடுவேன், கிரிக்கெட் விளையாடினால்  ரசித்து பார்ப்பேன்.

சச்சின் , இந்த பெயர்  கேட்டால் உங்களுக்கு என்ன தோன்றும். ?

கிரிக்கெட்.

இந்த மாதிரி யார் பெயர் கேட்டாலும் தோன்றுபது இல்லை. கிரிக்கெட் என்றாலும் சச்சின் தான் முதலில் நினைவுக்கு வருபவர்.இந்த சிறப்பு யாருக்கும் இல்லை.தன் 16 வயது முதல் ரன் எடுத்து கொண்டே இருக்கிறார். இவர் அடிக்காத சதங்கள் இல்லை. முதன் முதலில் 200 ரன்களை எடுத்தவரும் இவர்தான். தென் ஆப்ரிக்காவிற்கு எதிராக இந்த இரட்டை சதத்தை அடித்தார் , அன்று முதல் இன்று வரை இவர் தான் அதிக ரன் எடுத்த கிரிக்கெட் வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக இருந்தார்.

இன்று அதை சேவாக் தட்டி சென்று விட்டார், இந்த சாதனையை படைத்தவர் இந்தியர் என்ற போதிலும், மேட்ச் பார்க்கும் போது அவர் அவுட் ஆக வேண்டும் என்று வேண்டி கொண்டோம். நானும் என் நண்பனும்.

என்ன எப்படியோ ? அவர் அடித்து விட்டார். இதை சச்சின் பாராட்டுவாரே தவிர வெறுக்க மாட்டார். அவரின் ரசிகர்கள் மட்டும் எப்படி இதை வெறுப்பார்கள்.சேவாக்'ம் இந்தியர்தானே , இவரின் ஆட்டம் சச்சின் போலவே தான் இருக்கும். 

இவரின் இந்த சாதனையால் , சாதனை நாயகன் புகழ் ஒன்றும் மங்கி போகாது. அதிக ரன் எடுத்த கிரிக்கெட் வீரர் ஒரு இந்தியர்.. 

(கருத்துக்கள் மறக்காமல் இடவும் )

Wednesday, 7 December 2011

மயக்கம் என்ன ?

                           
 ஏதாவது படம் பார்க்கும் பொழுது " அட நாம மாப்ள மாதிரி இருக்கானே இந்த ஹீரோ " அப்படி தோன்றும். எனக்கும் அப்படித்தான் என் நண்பன் தினேஷ்'ஐ பார்ப்பது போல இருந்தது. அவனை பார்க்கும் போது எல்லாம் அவன் முகத்தில் சிரிப்பு இருக்கும் . கலகலப்பாக பேசுவான், எனக்கு அவன் கள்ளம் கபடம் இல்லாதவனாக தான் தெரிகிறான். அவனும் புகை படம் எடுப்பவன் தான். அவனது புகை படங்களை பார்க்க ............... இங்கே கிளிக் செய்யவும். 





மயக்கம் என்ன ?

படம் எப்படி இருக்குது ...

அதுக்கு நான் சேத்து போயிருவேன் . படம் பார்த்து விட்டு சொன்னவர்கள் இதை தான் கூறினார்கள் . எது எப்படியோ நாம போய் பார்த்தாதான் மனசுக்கு திருப்தி . அப்படித்தான் நினைத்து இந்த படத்துக்கும் போனேன். 

           அப்போதான் புரிந்தது படம் பார்த்து சொன்னவர்கள் இயக்குனர் பேரரசு ரசிகர்கள் என்று. நாலு சண்டை , வில்லனை பழி வாங்கும் ஹீரோ , வசனம் பேசியே சாகடிக்கும் நாயகன்.
இப்படியே படம் பார்த்து பழகியவர்கள் , இந்த படம் பார்த்தால் சாகத்தான் தோணும். 


         வேறு வேறு துறை'யில்  இருக்கும் நண்பர்கள். இவர்களுடன் இருக்கும் புகை பட எடுப்பதில் வளர துடிக்கும் இளைஞன் தனுஷ். தன் நண்பன் சுந்தர், தான் காதலிக்கும்  பெண்ணை தன் நண்பர்கள் பட்டாளத்தில் இணைத்து கொள்ள கூட்டி வருகிறான். அது முதல் தனுஷ்கும் ரிச்சாக்கும் மோதல் முட்டி கொள்கிறது . தனுஷ் நடிப்பு அட அட போட வைக்கிறார்  . பல்லியை பார்த்து பயப்படும் இடத்திலும் சரி, 
அது என்னோட போட்டோ 'னு வந்து சொல்லுங்க சார், இது என் லைப் என்று கலங்கும் இடத்திலும் சரி,  முதுகில் தட்டி குடுக்கலாம் போல இருக்கிறது. 

யாருடா இந்த பொண்ணு ! தனியாக கவனிக்க வைக்கிறார் ரிச்சா .. இரண்டாம் பாதியில் தன் கணவனை விட்டு எந்த நிமிடமும் பிரியாமல் இருப்பது, நமக்கே அனுதாபத்தை  வர வைக்கிறது. தன் குழந்தை கருவில் அழியும் இடத்தில பாவ பட வைக்கிறார். 

ஏதாவது சோகமா இருக்கும் போது பிறை தேடும் இரவிலே பாடல் கேட்டு பாருங்கள் ,மன  அழுத்தம் புரியும். 

கேள்வி:

தனுஷ் எதுக்கு மாடி மேல இருந்து விழணும்?

 இது ஒரு நல்ல கேள்வி?

பதில்:

அவ அவனுக்கு வந்தாதான் தெரியும் வலியும் சளியும்.  அவன் பெருசா நேனைகறதே அது ஒன்னுதான் , அதே போனதுக்கு அப்புறம் ............  ஒன்னும் இல்ல உங்க ஜட்டிய ஒருத்தன் களவாடிட்டு போறான் . உங்களுக்கு எப்படி இருக்கும் .  ஜட்டிக்கே இப்படினா அது அவன் லைப் சார்....................

படத்தில் பிடித்த இடம்:

புத்தகம் ஒன்று குப்பை தொட்டிக்கு போனதுக்கு அப்பறம் , திரும்பவும் மேசைக்கு வந்து, உயர் நிலை அடையும். அதுதான் சார் லைப்........   

படம் ௦ மதிப்பெண்கள் :60 க்கும் மேல் 

(மறக்காமல் கருத்துகள் தெரிவிக்கவும் )