Tuesday, 15 May 2012

பசங்க 2


காலைல எந்திரிச்சு இப்படி எப்பவம் ஓடினது கெடையாது....

இப்ப ஓடிட்டு இருக்கேன்............

யப்பா இப்படி மூச்சு வாங்குது....... எனக்கு முன்னாடி ஒரு பெரியவரு ஓடிட்டு இருக்காரு....

அவருக்கு வயசு 50 இருக்கும்........ எனக்கு 20 தான்........

அது எப்படி அவரு எனக்கு முன்னாடி ஓடலாம்.... இன்னும் கொஞ்சம் வேகமா ஓடினேன்....

அவரை தாண்டி ஓடும் போது சிரிச்சாரு?

எனக்கும் தான் சிரிப்பு ........ அவரை ஜெய்ச்சுட்டோம்மல்ல்..............

அதுக்கு அப்பறம் 5 நிமிசம் தான்.......

எனக்கு முன்னாடி நெறைய பேர் ஓடராங்க.....

எல்லாருக்கும் வயசு 30 இல்லைனா அதுக்கும் கம்மியாதான் இருக்கும் .

இவங்களை எப்படி ஜெய்க்கரது......

அட போங்கடா ................................ உக்காந்துட்டேன்...........

பின்னாடி வந்த அந்த பெரியவரும் என் பக்கத்துல நின்னு கை காலும் ஆடிக்கிட்டு இருந்தாரு....

என்னப்பா உனக்கு முன்னாடி இத்தனை பேர் ஓடராங்க....? கேட்டார் அந்த பெரியவர்..

...................................?(சிரித்தேன்)

இன்னைக்குத் தான் பர்ஸ்ட் டைம் ஓடரயா?

ஆமாங்க...!

நான் கெழவன் என்னை முந்தி வந்துட ..................... இன்னைக்கு வந்துட்டு எல்லாத்தையும் முந்தி ஓடணும்னா? முடியுமா?

என்ன பெரியவரே ... இந்த வயசுல எல்லாத்துக்கும் புத்தி மதி சொல்லணும்னு எதாவது சட்டம் இருக்கா என்ன? நான் இப்ப

எதிர்திசைல ஓடினா... நீங்க எல்லாம் எனக்கு பின்னாடி தானே? புதுசா சொல்லி குடுங்க எப்ப பாத்தாலும் குத்தம் சொல்லிக்கிட்டே

இருக்கறது.

.....................?????????

தம் அடிக்கறீங்களா? பேசமா போனா என்ன அர்த்தம் ... சொல்லறதுக்கு எதாவது புத்தி மதி இருக்கா?


(1 : அப்பு இவனுக சும்மா இருக்கறதால தான்  வம்மு தும்மு பண்ணிட்டு இருக்காங்க?
 2 : அதுக்கு என்ன பண்ண சொல்லறீங்க ?
கை புள்ள : பேங்க் ஒன்னு கட்டி விடுங்க நடத்தரோம்................ )